லிங்க செந்தூரம்

வணக்கம்                  

லிங்க செந்தூரம்

36 கிராம் லிங்கம்
எலுமிச்சம்பழச் சாறு 600 மில்லி
வெள்ளை வெங்காயச் சாறு 600 மில்ல
சுத்திசெய்த சேராங்கொட்டை 432 கிராம்
பசுவின் நெய் 432 கிராம்
திறமான தேன் 432 கிராம்

செய்முறை

லிங்கத்தை எலுமிச்சம்பழச்சாற்றில் கிழி கட்டி சிறு தீயாக எரித்து எடுத்துக்கொள்ளவும் சாறு முழுவதும் சுண்டி இருக்க வேண்டும். அதேபோல் வெள்ளை வெங்காயச் சாற்றிலும்  எடுத்துக் கொள்ளவும். சேராங்கொட்டை மைபோல் இடித்து அதனுடன் நெய்யையும் தேனையும் கலந்து இரும்பு சட்டியில் விட்டு அதில் மேற்சொன்ன லிங்கத்தை போட்டு சிறு தீயாக எரித்து முடிவில் சுண்டியவுடன் தீப்பிடித்து எரிந்து அடங்கிகிவிடும். ஆறிய பின்பு லிங்கத்தை எடுத்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இது ஒரு அருமையான லிங்க செந்தூரம் ஆகும்.

அளவு:  ஒன்று முதல் இரண்டு குண்டுமணி அளவு

தீரும் நோய்கள்:  தலை மூளை இருதயம் ஈரல் மண்ணீரல் முதலியவை பலப்பட்டு தாது வளமை தேகதிடம் மனோதிடம் முதலானவை அதிகமாகி நல்ல தேக ஆரோக்கியத்தை கொடுக்கும். குழந்தையின்மைக்கான லேகியங்களில் அனுபான அளவில் தர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இது ஹக்கிம் பா மு அப்துல்லா சாயபு அவர்களின் முறை. எனது அனுபவ செய்முறையில் பதிவிட்டுள்ளேன்.

வா மனோகரன்.
சங்ககிரி.

Comments

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)