தாமிர ரச சுண்ணம்

தாமிர ரச சுண்ணம் ஆய்வு

அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்

வெள்ளை எருக்கலம் பூச்சாற்றில் பத்து கிராம் சுத்தி செய்த தாமிரமும்  சுத்தி செய்து கட்டிய பாதரசமும் சேர்த்து அரைத்து புடம் போட்ட சுண்ணம்
இது மூன்று புடம் போட்டது தான்.  இது மஞ்சளுக்கு கிழக்கும். தண்ணீரில் மிதக்கும்
எவ்வளவு நெருப்பிற்கும் புகையாமல் நிற்கும். ஆனால் சுண்ணம் கடுங்காரமில்லை.

இப்போது நூறு கிராமில்
கடுங்கார சுண்ணமாக போட்டு
வருகிறேன்

அந்த சுண்ணத்தில் அரை அரிசி அளவு வாழைப் பழத்தின் காம்பில் வைத்து இருக்கிறேன்.
நான்கு நாட்கள் ஆகியும் பழம் அழுகாமல் லேசாக இறுகும் தன்மை அடைகிறது.

கடும் சுண்ணத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இப்போது காயாக மாறி இருக்கும்.

எந்த ஒரு மருந்தும் முதலில் நான் சாப்பிட்டு பின் தான் மற்றவர்களுக்கு கொடுப்பேன்.

நான் சாப்பிட்ட நான்கு நாட்களில் உடம்பு அதிக சக்தி பெறுகிறது. முயற்சி செய்யாமல் உள் சுவாசம் நடைபெறுகிறது. அதிக வெயிலில் சென்றாலும் களைப்பு வருவதில்லை. இன்று மம்சாபுரம் பகுதியில் நல்ல மழை பெய்தது. அப்போது வேண்டும் என்றே மழையில்
நனைந்தேன். ஆனால் குளிர் தெரியவில்லை.

செம்பு சுத்தி பற்றியும் ரசம் சுத்தி பற்றியும் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். மீண்டும் ஒரு தடவை  போடுகிறேன்.

நான் போட்ட பதிவை மறுநாள் தான் பார்ப்பேன். எனக்கு வேலை அதிகம் இருப்பதால் அதிகம் போனில் தொடர்பு கொள்ளவோ அல்லது முகநூலில் தொடர்பு கொள்ளவோ முடிவதில்லை

இருந்தபோதிலும் நான் கற்ற கல்வி அனைவரிடமும் சென்றடைய வேண்டும். அனைத்து மக்களுக்கும் பாரம்பரிய உணவு மற்றும் தனக்குத்தானே நோயின்றி வாழ தெரிய வேண்டும் என்பதற்காக மாதம் ஒரு நாள் மூலிகைப் பயிற்சியும் இலவசமாக செய்து வருகிறேன்

என்னுடைய எண்ணம் நிறைவேறும் வகையில் என்னை விருதுநகர் மாவட்டத்திற்கு SMF தமிழ்நாடு
பாரம்பரிய சித்த மரபினர் சங்கத்ற்கு தலைவராகவும்
மற்றும் அகத்தியர் குரு சன்னிதான மடாதிபதி பதவிக்கும் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

இந்த சித்தர் பெருமக்கள் கொடுத்த பதவியை விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் துணையுடன் சீரும் சிறப்புமாக உலக மக்கள் பயன் பெறும் வகையில் கொண்டு செல்வேன்

இத்துடன் சித்தர்கள் கண்ட அனைத்து காயகற்ப மருந்துகள் மற்றும் அதன் பயன்கள் செய்முறை அதிக அளவில் இடம் பெறும்.

          நன்றி

பிரம்மஸ்ரீீீீ கோவிந்தன், மம்சாபுரம்

Comments

  1. நன்றி ஐயா. சுத்தி முறைகளின் லிங்க் பதிவிடவும்.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி. உங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விழைகிறேன்.

    ReplyDelete
  3. ஐயா உங்கள் பதிவுகள் சிறப்பு.

    நன்றி
    அருள்மொழி தேவகோட்டையில் இருந்து.

    ReplyDelete
  4. ஐயா வணக்கம் நான் சித்தமருத்துவர் தற்போது வைத்தியம் செய்யவில்லை வாத வித்தை முயற்சி செய்கிறேன் தாமிரம் ரசம் சுன்னம் செய்வது எப்படி தயவு செய்து தாங்கள் தெளிவாக அனுப்பி வைக்கவும்

    ReplyDelete
    Replies
    1. மூலிகை சாறுகளில் எந்த உலோக ,பாஷாண மருந்துகள் முடியாது...

      1.வெடியுப்பு ஜெயநீர் இல்லாமல் மருந்தும் ஆகாது வேதையும் ஆகாது...களிம்பு அற்றதாமிர பற்பம் சுண்ணம் செந்தூரம்...சித்தரகளை தவிர இன்று வரை எந்த நபரும் செய்ய வில்லை...

      Delete
  5. பதிவாஉங்கள்பாராட்டுகள்


    கருத்தப்பாண்டியன் எம் கே
    சித்த மருத்துவர்
    வயல்வெளி சித்தர்கள் அகத்தியர் தவவனம்
    சங்கம்பட்டி.
    உசிலம்பட்டி
    86107 33409

    ReplyDelete
  6. மூலிகை சாறுகளில் எந்த உலோக ,பாஷாண மருந்துகள் முடியாது...

    1.வெடியுப்பு ஜெயநீர் இல்லாமல் மருந்தும் ஆகாது வேதையும் ஆகாது...களிம்பு அற்றதாமிர பற்பம் சுண்ணம் செந்தூரம்...சித்தரகளை தவிர இன்று வரை எந்த நபரும் செய்ய வில்லை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெங்கார பற்பம்

படிகார பற்பம் (அனுபவ முறை)

லிங்க செந்தூரம்