Posts

அமிர்த கரணம்

வணக்கம் அமிர்த கரணம் ============= இது ஒருமுக்கியமான விஷயம்.நம் சித்தர் கலையின் உச்சகட்ட முறை இது.என்ன செய்ய காலத்தின் கோலம்.இதை ஆயுர்வேதம் தங்கள் முறை எனக்கூறி இதை செய்து விஞ்ஞான பூர்வ விளக்கமளித்து அவர்கள் இந்நாட்டின் மருத்துவ முறையே ஆயுர்வேதம்தான் என்பது போல மாயதோற்றத்தை உண்டாக்குகின்றனர். நம் சித்த மருத்துவத்தில் மட்டும்தான் அமிர்தம்  அதன் மூலம் மரணமில்லா பெருவாழ்வு என்ற கருத்தியல் இருக்கிறது.நம் சித்தமருத்துவர்களே இதை பற்றி பெரிதாக எடுத்து கொள்வதில்லை என்பதே வருத்தமான விஷயம்தான்.எனவே நான் ஆய்வுசெய்து உணர்ந்த விஷயத்தை நம்பாரம்பரியத்திற்காக பகிர்கிறேன். அமிர்த கரணம் இரண்டு வகைப்படும். 1,காரமான சுண்ணம், செந்தூரம்,பற்பம் இவைகளை அதன் எடைக்கு நான்குபங்கு பசுநெய் விட்டு ஒருநாள் வைத்திருந்து பார்க்க நெய்முறிந்து நீராக இருக்கும்.நெய் இந்நிலையை அடைந்தால் மட்டுமே இந்த அமிர்தகரணம் பயன்படும்.பிறகு இதை அடுப்பேற்றி சூடுசெய்து நீரானநெய் சுண்டி வரலாக ஆனபின் அதை கல்வத்தில் அரைத்துபத்திரபடுத்தவும்.இதன் செயல் அளவிடற்கரியதாக இருக்கும். 2,காரமின்றி சாந்தமாக உள்ள சுண்ணம்,செந்தூரம்,பற்பம்...
ஆண்குறியின் மேற்பூச்சு மருந்து. ஒருமுழ சதுரமுள்ள வெள்ளை காடா துணியை எடுத்துக்கொள்ளவும்.அதில் சதுர கள்ளி பாலை ஒருக்கம்மட்டும் நன்கு பூசவும்.நிழலில் உணர்த்தி உணர்த்தி மூன்றுமுறை பூசவும்.அதின்மீது ஒருபலம் மொக்கு நீக்கப்பட்ட கிராம்பை பொடித்து தூவ அதில் ஒட்டி பிடித்துக்கொள்ளும்.பிறகு நிழலிலேயே நன்கு காயவைத்து ஒரு கம்பியில் சுருட்டி வெள்ளாட்டு நெய் அல்லது எருமை நெய்யில் நனைத்து கொளுத்திவிட்டு சுடர்தைலமாக கீழ் ஒரு பீங்கான் கிண்ணம் வைத்து சேகரிக்கவும். இதை ஆண்குறியை சற்று விரைப்பாக்கி மலர்பகுதி மீது படாதவாறு தடவி மேலே வெற்றிலை அல்லது எருக்கன் பழுப்பை சுற்றி தளர்வாக நூலால் கட்டிவிடவும்.இதே போல் 7 அல்லது 11 நாட்கள் செய்யலாம் தேவைப்படின் 10 நாள்கழித்து மீண்டும் இதேபோல் செய்யவும். பயன்கள்:-வெளிப்புறமாகமட்டுமே எடுக்கக்கூடிய துர்நீர்கள் கபம் முதலியவற்றை நீக்கி ஆண்குறிதுவளல் கருத்து சிறுத்திருத்தல் ஆகியவை நீங்கி உடலின் இயல்பு நிறத்துடனும் பருத்து நீண்டும் உறவுக்கு உபயோகமாகவும் இருக்கும். இதனுடன் நான் ஏற்கனவே பதிவிட்ட உம்பல கெம்பீர தைலத்தை உள்மருந்தாக பயன்படுத்த அருமையான பயனை அடையலாம்.தற்சமய...
வணக்கம் ஆண்மை குறைவு தீர உம்பல கெம்பீர தைலம் ==================== தேவையான பொருட்கள் தோல்நசுங்காமல் எடுக்கப்பட்ட எலுமிச்சை சாறு 400 கிராம் கேரட் சாறு 175 கிராம் கருப்பு திராட்சை சாறு 175 கிராம் தோல்நீக்கி பிழிந்து சுண்ணாம்பு நீக்கப்பட்ட இஞ்சி சாறு 175 கிராம் பருத்தி எண்ணை 200 கிராம் நல்லகெட்டி தேன் 100 கிராம். வேகவைத்த நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சல் கரு எண்ணிக்கையில் 20. செய்முறை அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறு தீயில் கிளரி இளக பதம் வந்ததும்  இறக்கிவிடவும். மாத்திரை அளவு :-இரவு படுக்கைக்கு முன் 50 கிராம் அளவிற்கு சாப்பிட்டு காய்ச்சி கற்கண்டிட்ட பாலை மேலே பருகவும். தீருபவை:- ஆண்குறியின் அடிசிறுத்து நுனி பெருத்தல் ஒருபக்கமாக வளைந்து இருத்தல் கருத்து சிருத்து இருத்தல் போன்ற இழிகுணங்கள் சரியாகி ஆண்குறிபருத்து நீண்டு ஆண்மைக்கு யோக்கியமாய் இருக்கும்.மேலும் விந்தை கெட்டிசெய்து அதிக நேரம் போகம் செய்ய உதவும். இது எனது அநுபவத்திலுள்ள நல்லமுறை.இதனுடன் சில மேற்பூச்சு மருந்துகளை பயன்படுத்த நல்ல பலன்களை அடையலாம். நூல் ஆதாரம்:- ஹக்கீம் பா.மு.அப்துல்லாசாயுபு அவர்களின் யுநாந...

ஒற்றை தலைவலிக்கு

நண்பர்களுக்கு வணக்கம். வீட்டில் பரம்பரையாக ஒற்றை தலை வலிக்கு எங்க பாட்டி  3  நாள் மருந்தில் குணமாகும். மீண்டும் ஒற்றை தலை வலி வந்ததில்லை. தற்போது பாட்டிக்கு பிறகு எங்க அம்மா இந்த மருந்தை கொடுக்கிறார். ஒரே தடவையில் குணமாகி போனவர்களும் உண்டு. ஒற்றை தலைவலிக்கு எதிர் புரம் காதில் மருந்து விடுவார்கள். காலையில் வெறும் வயிற்றில். யாரிடமும் பேசக் கூடாது. மருந்து விட்ட பிறகு யாரிடம் முதலில் பேசுகிறார்களே அவர்களுக்கு தலைவலி போய்விடும் என்று சொல்லி மருந்து விடுவார்கள். எனக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் தெரியும் அந்த மருந்து. குழுவினர்க்கு அந்த மருந்து... துளசி இலை - 10எண்ணிக்கை உப்பு கள் - 1 கையில் நுனுக்கிய சாறு 2 சொட்டு தலை வலிக்கு எதிர் புரம் காதில் தொடர்ந்து 3 நாள் விட ஒற்றை தலைவலி வராது... குடும்ப அனுபவ முறை... பாரிச வாதத்தை 2 பத்தியத்தில் குணமாக்கும் பரம்பரை முறையை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி, மேலும் பயணிப்போம்... J.லோகேஷ் குமார், வேலூர்.

தேரையர் களிம்பு

திரு ஆத்மஜோதி கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களின் தலைமையில் இயங்கிவந்த தமிழ் பண்பாட்டு சித்தமருத்துவ அறிவு ஆய்வகத்தின் தலைமை குருவாகிய பேராம்பட்டு தெய்வத்திரு P.R.கிருட்டிணன் ஜயா அவர்களின் அனுபவ ராஜகளிம்புமுறை. தேவையான பொருட்கள் ===================== இலிங்கம் 16.5 கிராம் இரச கற்பூரம் 25 கிராம் மிருதார்சிங்கி 25 கிராம் பால்துத்தம் 25 கிராம் மயில்துத்தம் 6 கிராம் குங்கிலியம் 100 கிராம் தேங்காய் எண்ணெய் 500 மிலி தண்ணீர் 2.5 லிட்டர் பஷாண சரக்குகளை சுத்திசெய்து வரிசைப்படி அரைத்து உறவான உடன் 3 சாமம் அரைத்து வைத்துக்கொள்ளவும்.தேங்கா எண்ணையில் குங்கிலியத்தை பொடித்து போட்டு சூடாக்கி குங்கிலியம் நன்கு கரைந்தபின் இரும்புவடியில் வடிக்கவும்.உடன் அரைத்துவைத்த பாஷாண சரக்குகளை அதிலிட்டு கரண்டியால் உறவுபட கலக்கவும்.பிறகு தண்ணீரை அளவுபடி ஊற்றி மத்தால் நன்கு கலக்கி கைபொருக்கும் பதத்தில் கையால் நன்கு அரைமணிநேரம்வரை கலக்கவும்.மருந்துதயார். தீரும் நோய்கள் இது வெளிப்பிரயோக களிம்பு. சேற்றுப்புண்,கால்பித்தவெடிப்பு வண்டுகடி அறைகளில் வரும் அரிப்பு தீப்புண் வெட்டுக்காயம் சர்க்கரைநோய்ப்புண் முகப்பரு தல...
சர்வ சுரக் குடிநீர் (எ) நிலவேம்பு குடிநீர் அனுபவமுறை: 01. நிலவேம்பு சமூலம் 02. பற்பாடகம் 03. சீந்தில் தண்டு 04. சிறு காஞ்சோரி வேர் 05. விஷ்ணு காந்தி 06. பேய் புடல் (அ) பாகல் 07. வேப்பம் பட்டை 08. கோரைக்கிழங்கு (எ) முத்தக்காசு 09. வெட்டி வேர் 10. மிளகு 11. சுக்கு 12. திப்பிலி 13. திப்பிலி மூலம் 14. கோஷ்டம் செய்முறை:  மேற்கண்ட 14 பொருட்களையும் சேகரித்து ஒன்றிரண்டாய் இடித்து கலந்து வைத்துக் கொள்ளவும். பிரயோகம்: ஒரு கைப்பிடி மருந்தை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து அரை லிட்டராகும் வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். சுரம் வந்தவர்களுக்கு மூன்று மணிக்கு ஒரு முறை மேற்கூறிய கஷாயத்தை 30ml புகட்டவும். மிக விரைவாக அதிசயிக்கும் படி அனைத்து சுரங்களும் குணமாகிவிடும். குறிப்பு: சுரம் கண்டவர்களுக்கு மேற்கண்ட மருந்தோடு அன்னபேதி செந்துரம்,  லிங்க செந்தூரம், வஜ்ரகண்டி மாத்திரை, சண்டமாருத செந்தூரம், வான் மெழுகு முதலான மருந்துகளையும் கூட தேவைக்கேற்ப பிரயோகித்தால் மேலும் சிறப்பான குணங்களை பெறலாம். நன்றி, பிரேம், ஓசூர் SMF, பொதுச் செயலாளர் ஸ்ரீல ஸ்ரீ பிரம்ம ரிஷி குரு ம...

நீர் கட்டினால் வீக்கமடைந்து இருப்பதற்கு தீர்வு

வணக்கம் உடல் நீர் கட்டினால் வீக்கமடைந்து இருப்பதற்கு மருந்து. வெள்ளாட்டுசிறுநீரை நன்கு துணியில் வடிகட்டி வெய்யிலில் உலர்த்தி எடுத்த உப்பு 18 கிராம் சுத்தி பூநீறு அல்லது மாவு சோடா 72 கிராம் நவசாரம் 72 கிராம் இது மூன்றையும் குழம்பு பதமாக எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து பனியில் வைத்து தெளியும் ஜெயநீரை இருத்துக்கொள்ளவும். பெருங்கம்பிகளான வெடியுப்பு 72 கிராம் கொண்டுவந்து மேற்கண்ட ஜெயநீரில் தோய்த்து நன்கு வெய்யிலில் காயவைக்கவும்.இதே போல் 9 பாவனைசெய்து உலர்த்தவும்.பின் பூவரசம் பழுப்பு இலைகளை ஒருமண்சட்டியில் 3 விரற்கணம் பரப்பி அதன்மீது பக்குவப்படுத்தப்பட்ட வெடியுப்புகம்பிகளை வைத்து மேலும் பூவரசன் பழுப்புகளை போட்டு அழுத்தி அடுப்பின் மீது வைத்து மூலிகை சாம்பலாகும்வரை எரிக்க வெடியுப்பு உருகிஇருக்கும்.பிறகு அதை நீர்விட்டு அரைத்து துணியில் வடிகட்டி சட்டியிலிட்டு எரிக்க உறைந்து பற்பமாகும். துவரையளவு பற்பத்தை இளநீர் நெருஞ்சிமுள் குடிநீர் முள்ளங்கிசாறு இவற்றில் ஏதோ ஒன்றில் சாப்பிட நன்கு நீர்பிரிந்து கல்லடைப்பு சதையடைப்பு ஆகியவை நீங்கி உடலின் நீரேற்றம் வடிந்து வீக்கம் குணமாகும்.இது ஓர் சிறந்த அ...